திருமணமான ஒரு மாதத்தில் உயிரிழந்த புதுமாப்பிள்ளை : கதறும் மனைவி!!

1112

இந்தியாவில் போதை பழக்கத்துக்கு அடிமையான இளைஞர் திருமணமான ஒரு மாதத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரை சேர்ந்தவர் ரிக்கி லஹோரியா (23). போதை மருந்துகளுக்கு அடிமையான இவருக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து இனி போதை மருந்துகளை தொடமாட்டேன் என ரிக்கி தனது தாயிடம் கூறியுள்ளார். இதோடு போதை பழக்கத்திலிருந்து விடுபட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ரிக்கி. இந்நிலையில் ரிக்கியின் கல்லீரல் அதிகளவு சேதமடைந்த காரணத்தால் அவரின் உயிர் நேற்று பிரிந்தது.

ரிக்கியின் மாமா ராஜேஷ்குமார் கூறுகையில், வீட்டிலிருந்த பொருட்களை விற்று போதை மருந்துகள் வாங்கும் அளவுக்கு ரிக்கி சென்றான்.

ஆனால் திருமணம் ஆனபின்னர் திருந்திவாழ ஆசைப்பட்டான், அது நடக்காமலேயே போய்விட்டது என சோகத்துடன் கூறியுள்ளார்.