திருமணமான ஒரு வாரத்தில் கணவரை பிரிந்த மனைவி : அதிர்ச்சியில் புதுமாப்பிள்ளை செய்த செயல்!!

802

புதுமாப்பிள்ளை செய்த செயல்

திருமணமான ஒரு வாரத்தில் காதல் மனைவியை அவர் பெற்றோர் தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்ற அதிர்ச்சியில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தெலுங்கானா மாநிலத்தின் சூர்யபெட் நகரை சேர்ந்தவர் நவீன் ரெட்டி. இவரும் விஜயலட்சுமி என்ற பெண்ணும் சில ஆண்டுகளாக காதலித்த நிலையில் ஒரு வாரத்துக்கு முன்னர் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து அறிந்த விஜயலட்சுமியின் பெற்றோர் இரு தினங்களுக்கு முன்னர் காவல் நிலையத்தில் நவீன் குறித்து புகார் அளித்தனர்.

புகாரை தொடர்ந்து விஜயலட்சுமி மற்றும் நவீனை பொலிசார் அழைத்தனர், அங்கு சமாதானம் பேசி மனைவியை தன்னுடன் பொலிசார் அனுப்பிவைப்பார்கள் என நவீன் நினைத்த நிலையில், விஜயலட்சுமியை அவரின் பெற்றோருடன் பொலிசார் அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அதிர்ச்சியில் உறைந்த நவீன் காவல் நிலையத்திலேயே விஷம் குடித்து மயங்கினார். பின்னர் உடனடியாக பொலிசார் நவீனை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மனைவியை தன்னிடம் இருந்து பிரித்த ஏக்கத்தில் காவல் நிலையத்திலேயே நவீன் விஷம் குடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.