இந்தியாவில் திருமணம் முடிந்த மறு நிமிடமே மணப் பெண் மாரடைப்பு காரணமாக இறந்து போன சம்பவம் திருமணத்தில் வந்திருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவின் மெகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள அச்சம் பேட்டையில் வெங்கடேஷ் மற்றும் லட்சுமிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்திற்காக அங்கு அனைவரும் கூடியிருந்தனர். அப்போது திருமணம் முடிந்ததால், வெங்கடேஷ் மற்றும் லட்சுமியை அருந்ததி நட்சத்திரம் பார்ப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
அருந்ததி நட்சத்திரத்தைப் பார்க்கும் போது, லட்சுமி திடீரென்று வெங்கடேசனின் காலில் சரிந்து விழுந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
லட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
திருமணம் நடந்து முடிந்த உடனே மணப்பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தை அறிந்த பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.