திருமண அழைப்பிதழ் வைத்துவிட்டு வீடு திரும்பும்போது நடந்த சோக சம்பவம்

596

சென்னையில் ஏற்பட்ட லாரி விபத்தில் தாய் – மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அண்ணாசாலையில் இன்று வேகமாக சென்ற தண்ணீர் லாரி ஒன்று முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மோதியது. இதில் லாரியின் முன் சக்கரத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது.

இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த தாய், மகன் மீது லாரியின் முன்சக்கரம் ஏறி பின்சக்கரத்திலும் சிக்கி இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து நடந்தவுடன் லாரி ஓட்டுநர் பாலச்சந்திரன் லாரியில் இருந்து இறங்கி தப்பிச்சென்றார். பின்னர் அருகில் உள்ளவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிசார் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த இருவரும் தாயும், மகனும் என்பதும் சேத்துப்பட்டை சேர்ந்த இவர்கள் மகளின் திருமணத்திற்காக அழைப்பிதழ் வைத்துவிட்டு வீடு திரும்பும்போது விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்ததும் தெரியவந்தது.