உத்தரபிரதேச………….

உத்தரபிரதேச மாநிலத்தில் மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணை நடனமாட அழைத்ததால் கோபத்தில் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கண்ணுஜ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் அதே மாவட்டத்தின் பரேலி என்ற பகுதியைச் சேர்ந்தவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமகன் இருக்கும் பகுதியில் திருமணம் நடக்கவிருந்தது. இதற்காக மணமகள் வீட்டார் அனைவரும் அங்குக் கிளம்பிச் சென்றனர்.

திருமணம் நடப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. திருமணத்திற்கு முன்னதான சடங்குகளும் ஒவ்வொன்றாகத் துவங்கியது. இப்படியான ஒரு சடங்கின் போது மணமகனின் நண்பர்கள் சிலர் மணப்பெண்ணை நடனமாட அழைத்துள்ளனர். அவர் மறுத்த போதும் அவர்கள் மணப்பெண்ணின் கையை பிடித்து இழுத்து அவர்கள் நடனமாடும் இடத்திற்கு வந்து நடனமாடச் சொல்லிக் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த மணப்பெண் அங்கிருந்து சென்றுவிட்டார். இதன் பின்னர் இருவீட்டாருக்கும் இடையே இந்த விவகாரத்தில் த க ராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மணப்பெண்ணின் வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டு வீடு திரும்ப முடிவு செய்துவிட்டனர். அது மட்டுமல்ல மணப்பெண்ணின் வீட்டார் அப்பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனிற்கு சென்று மணமகன் மற்றும் அவரது வீட்டாரின் பேரில் வரதட்சணை புகாரும் அளித்துள்ளனர்.

இதனையடுத்து போலீசார் அவர்களை அழைத்து விசாரித்த போது தான் உண்மை தெரிந்துள்ளனர். இதனால் போலீசார் வழக்கைப் பதிவு செய்யவில்லை. இதற்கிடையில் மணமகன் வீட்டாருக்கும், மணப்பெண் வீட்டாருக்கும் சுமுகமாகப் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் மணப்பெண் வீட்டார் மணமகன் வீட்டாரிடம் ரூ6.5 லட்சம் நஷ்ட ஈடு தந்தால் புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்தனர். அதன் பின்னர் இந்த பிரச்சினை சுமூக முடிவிற்கு வந்தது. நடனம் ஆட அழைத்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.