பிரசவத்திற்காக சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

606

பெண்ணுக்கு நேர்ந்த கதி

திருவண்ணாமலையில் கவிதா என்ற பெண் மூன்றாவது பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் இறந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

துராப்லி தெருவில் உள்ள ஸ்ரீ பாலாஜி என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கவிதாவுக்கு, அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஆனால் கவிதாவிற்கு உடலில் ரத்தம் குறைவாக இருந்ததாகவும், இதனால் திருவண்ணாமலை அரசு மருத்துவனைக்கு மேல் சிகிச்சைகாக அவரை அனுப்பி வைத்துள்ளதாக ஸ்ரீபாலாஜி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது பாதிவழியிலேயே கவிதா உயிரிழந்துள்ளார். இதனால் தவறான சிகிச்சையால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, தனியார் மருத்துவமனை முன்பு குழந்தையுடன் உறவினர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர்.