பிரபல நடிகையும் அரசியல் பிரமுகரும் ஹோட்டலில் செய்த கூத்து : உண்மை அம்பலம்!!

1400

உண்மை அம்பலம்

தமிழில் கொக்கி, வைத்தீஸ்வரன், திருவண்ணாமலை என முக்கிய படங்களில் நடித்தவர் நடிகை பூஜா காந்தி. கன்னட சினிமா படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த 2012 ல் மதசார்பற்ற ஜனதாதள் கட்ச்சியில் இணந்தவர் பின் அதிலிருந்து விலகி கர்நாடக ஜனதா கட்சியில் இணைந்தார்.

2013 ல் பி.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பாக ரெய்ச்சூர் சட்டபேரவை தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி யடைந்ததார். இந்நிலையில் அவர் மீண்டும் ஜனதா தள கட்சியில் இணைந்தார்.

கடந்த 2016 ல் பெங்களூரு அசோகா ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்போது பா.ஜனதா பிரமுகர் அனில் மென்சினகாய் என்பவரும் தங்கியுள்ளார். இருவரும் இணைந்து செலவுகளை ஷேர் செய்துகொள்வதாக கூறியுள்ளனர். ஆனால் ஹோட்டலில் வாடகை ரூ 3.53 லட்சம் பாக்கி இருப்பதாக சொல்லப்பட்டது.

நீண்ட நாளாக பாக்கி பணத்தை செலுத்தாததால் ஹோட்டல் நிர்வாகம் காவல் துறையில் புகார் அளித்துள்ளது. இதனால் போலிசார் நடிகை பூஜா காந்தியை அழைத்து விசாரித்து ரூ 2 லட்சத்தை முதல்கட்டமாக வாங்கியுள்ளனர்.