போலிஸ்காரரிடம் மாட்டிக்கொண்டு செம அடிவாங்கிய பிரபல நடிகர்!!

714

அடிவாங்கிய பிரபல நடிகர்

தற்போது இருக்கும் காமெடியன்கள் மிகவும் உச்சத்தில் இருப்பவர் யோகி பாபு. அவர் இல்லாத படங்களை இல்லை எனலாம்.விஜய்யுடன் சர்கார், அஜித் நடிப்பில் வந்த விஸ்வாசம் என படங்களில் நடித்தவர். நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா படத்தின் கல்யாண வயசு பாடல் இவரை ஓஹோவென ஆக்கிவிட்டது.

ஒரு முறை நாடகத்தில் நடித்து முடித்து விட்டு நள்ளிரவு வேளையில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது போலிஸார் இருவரை அவரை மடக்கி பிடித்து விசாரணனை செய்தார்களாம். அந்த நேரம் சென்னையில் சாலையில் நின்று கொண்டிருக்கும் பைக்குகள், கார்களை மர்ம ஆசாமி ஒருவர் எரித்த சம்பவம் பெரும் பரப்பானது. இதனால் யோகி பாபு தான் அந்த ஆசாமி என சந்தேகித்தார்களாம்.

யோகி பாபு சொன்னதை நம்பாத போலிஸார் அவரை கன்னத்தில் அறைந்தார். காது நரம்புகள் வலிக்கும் அளவிற்கு இந்த அடியின் வலி இருந்ததாம். நீண்ட நேரமாக ஸ்டேஷனில் வைத்து நம்பிக்கை வந்த பிறகு தான் விடுவித்தார்களாம்.