மனநலம் பாதிக்கப்பட்டவரின் வயிற்றை பரிசோதனை செய்த மருத்துவர்கள் : காத்திருந்த அதிர்ச்சி!!

987

காத்திருந்த அதிர்ச்சி

சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரின் வயிற்றுக்குள் இருந்த பொருட்களை மருத்துவர்கள் நவீன சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளனர். அயனாவரம் பகுதியில் உள்ள மனநல காப்பகத்தில் ஜெயக்குமார் (52) என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் மனநலத்தை சரி செய்யும் சிகிச்சைகளை மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான ஒரு பரிசோதனையின் போது, ஜெயக்குமாரின் வயிற்றில் சாவிகள், செயின், நாணயம், சிம்கார்டு உள்ளிட்ட 40 பொருட்கள் இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு இரைப்பை மற்றும் குடல் மருத்துவத்துறையில் அனுமதிக்கப்பட்ட ஜெயக்குமாருக்கு எண்டாஸ்கோப்பி என்னும் நவீன உள்நோக்கு கருவி மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வயிற்றில் உள்ள பொருட்கள் அகற்றப்பட்டது.

இதையடுத்து, ஜெயக்குமாரின் உடல்நிலை தற்போது தேறி வருகிறது. இதுகுறித்து மருத்துவர் வெங்கடேஸ்வரன் கூறுகையில், ஜெயக்குமார் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், தவறுதலாக இந்தப் பொருள்களை விழுங்கியுள்ளார்.

சரியான நேரத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்க தவறியிருந்தால் குடலில் ரத்தப்போக்கு அல்லது நோய்த்தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம். சிகிச்சைக்கு பின்னர் வயிற்றில் உள்ள அனைத்துப் பொருள்களும் அகற்றப்பட்டதா என்பதை பரிசோதனை மூலம் உறுதி செய்து கொண்டோம் என கூறியுள்ளார்.