மனைவியின் தவறான தகவலால் இரயில் கழிவறையில் கிடந்த கணவரின் உடல்!!

787

இந்தியாவில் மனைவி கொடுத்த தவறான தகவலால் இரயிலின் கழிவறையில் கணவரின் உடல் இரண்டு நாட்களுக்கு மேல் கிடந்துள்ளது.உத்தர பிரதேசத்தின் கான்பூரில் இருந்து துண்ட்லா நோக்கி சஞ்சய் அகர்வால் என்பவர் கடந்த 24-ஆம் திகதி பாட்னாவில் இருந்து கோடா நகருக்கு செல்லும் அதிவிரைவு இரயிலில் பயணம் செய்துள்ளார்.

இரயிலில் ஏறிய பின்பு கழிவறையில் இருந்து கொண்டு, தனது மனைவிக்கு போனில் தொடர்பு கொண்ட அவர், உடல்நிலை சரியில்லாதது போல் தெரிகிறது என்று கூறி வைத்துள்ளார்.

இதனால் அவரது மனைவி மீண்டும் அந்த போனிற்கு தொடர்பு கொண்ட போது, தொடர்பு கொள்ள முடியவில்லை.இதையடுத்து இரயில்வே அதிகாரிகளை தொடர்பு கொண்ட அவர், தனது கணவர் பற்றி தகவல்களை கூறியுள்ளார்.

அவர்களும் பல இடங்களில் தேடியுள்ளனர், ஆனால் அவர் கிடைக்கவே இல்லை.இந்நிலையில், கோடா நகரை அடைந்த இரயில் 40 நிமிட இடைவெளிக்கு பின் பாட்னா நகருக்கு மீண்டும் திரும்பி சென்றுள்ளது.

அப்போது பாட்னா நகரில் இரயிலின் எஸ்1 பெட்டியில் கடந்த 27-ஆம் திகதி அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சஞ்சயின் மனைவி அதிகாரிகளிடம் தவறான இரயில் எண்ணை தந்துள்ளார். அவர் 13239 என்பதற்கு பதிலாக 13237 என்ற எண்ணை அளித்துள்ளார்.

அதுமட்டுமின்றி சஞ்சய் படுக்கை வசதி பெட்டியில் பயணித்துள்ளார். ஆனால் அவரது மனைவி குளிர்சாதன வசதி பெட்டியில் கணவர் இருக்கிறார் என்று கூறியதே கண்டுபிடிப்பதில் தாமதம் என கூறியுள்ளனர்.