
மாத்தறையில் கடந்த 28.07.2019 அன்று நடைபெற்ற 45 வது தேசிய விளையாட்டு பெருவிழாவில் பங்குபற்றி பதக்கம் வென்ற வவுனியா வீரர் இன்று (05.08.2019) வடக்கு மாகாண விளையாட்டு பணிப்பாளர் குருபரனால் கௌரவிக்கப்பட்டிருந்தார்.
தொலைத் தொடர்பு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுதுறை அமைச்சினால் நடத்தப்படும் தேசிய ரீதியிலான வூசூ கு த்துச் ச ண்டையில் பங்குபற்றி வெண்கலப்பதக்கம் வென்ற ஸ்ரீ.சிந்துஜன் (ஸ்ரீதர்சன்) வடக்கு மாகாண பணிப்பாளரினால் கௌரவிக்கப்பட்டிருந்தார்.
குறித்த வீரன் வடக்கு மாகாண வூசூ கு த்துச் ச ண்டை பயிற்றுவிப்பாளரும், வவுனியா ஏழாம் அறிவு தற்காப்புகலை சங்கத்தின் தலைவருமான எஸ்.நந்தகுமாரின் மாணவன் ஆவார். குறித்த வூசூ கு த்துச் ச ண்டை போட்டியில் பங்கு பற்றிய வவுனியா குத்துச் ச ண்டை வீரன் கா யமடைந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.