விவசாயியாக மாறிய ஐடி ஊழியர்… கோடிகளில் லாபம் பார்க்கும் இளம் பெண்!!

1419

கர்நாடக….

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த ரோஜா ரெட்டி(26) என்ற இளம்பெண், தனது ஐடி வேலை விட்டுவிட்டு, விவசாயம் செய்து வருகிறார்.

தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் காய்கறிகள், பழங்களை பயிரிட்டு கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகிறார்.

ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் காய்கறிகள் மற்றும் பழங்களை சாகுபடி செய்து, அவற்றை நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்கிறார்.

ஐடி வேலையை விட்டுவிட்டு வந்த இவர், தற்போது வெற்றிகரமான விவசாயியாக மாறியுள்ளார்.