ஹீரோ ஆக ஆசைப்பட்டு ஜீரோவான காதலன் : சுவாரசியமான உண்மை சம்பவம்!!

489

மும்பையை சேர்ந்த ரூபேஸ் – உமா ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். காதலர்கள் என்பதால் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர். திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தபோது, தனது தந்தையின் சம்மதம் இருந்தால் மட்டுமே நான் உங்களை திருமணம் செய்துகொள்வேன் என உமா உறுதியாக தனது காதலனின் கூறியுள்ளார்.

உமாவின் தந்தை ஒரு ஜோதிடர் ஆவார். உமாவின் தந்தையின் மனதில் இடம்பிடித்து திருமணத்திற்கு சம்மதம் வாங்க, சினிமாவில் வரும் பழைய யுக்தியை கையாண்டுள்ளார்

அதன்படி, ஷேன் என்பரை தயார் செய்து, அவர் தனது ஆட்களுடன் சென்று உமாவின் தந்தையை வழிமறித்து அடிக்கும்போது, ரூபேஸ் வந்து காப்பாற்றுவார். இதனால், உமாவின் தந்தைக்கு ரூபேஸ் மீது நல்ல அபிப்ராயம் ஏற்படும். இதுதான் திட்டம்.

திட்டமிட்டபடி, கடந்த 19 ஆம் திகதி, அந்தேரி பகுதியில் சம்பவத்தை அரங்கேற்றினார்கள். அதிக ஆசைப்பிடித்த ஷேக் கொஞ்சம் அதிகமாக நடித்து, உமாவின் தந்தை கைப்பேசியை பறித்துக்கொண்டார். அதே போல ரூபேஸ் ஹீரோ போல உள்ளே நுழைந்து, காதலியின் அப்பாவை காப்பாற்றி வீட்டில் விட்டார்.

அதன்பின்னர், உமாவின் தந்தையுடன் பழக்கம் ஏற்பட்டு, திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார். இதில்

, புதிய திருப்பமாக, உன் விடயத்தை உங்க மாமனாரிடமும் காதலியிடமும் சொன்னால் கதை அவ்வள வுதான். சொல்லாம இருக்கணும்னா, எனக்கு 90 ஆயிரம் ரூபா கொடுக்கணும் என்று மிரட்டியுள்ளான் ஷேக்.

இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபம் கொண்ட ரூபேஸ், ஷேக் மீது பொலிசில் புகார் கொடுத்தார். பொலிசார் ஷேக்கை விசாரித்ததில் மேலே கூறப்பட்ட தகவல்கள் தெரியவந்தன.

இதனைத்தொடர்ந்து, ஷேக்கிடம் மீட்கப்பட்ட போன் உமாவின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இப்படி ஒரு மோசடி திட்டத்தை அரங்கேற்றிய ரூபேஸையும் சிறையில் அடைத்துவிட்டனர்.

இருப்பினும், இதனை பெரிதுபடுத்திக்கொள்ளாத உமாவின் தந்தை, சிறையில் இருந்து வெளியே வந்ததும் திருமணம் செய்துவைக்கிறேன் என கூறியுள்ளார்.