தூத்துக்குடி….

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர், இதில் அதே பகுதியை சேர்ந்த ராமர் என்ற மாணவன் 3 ஆம் ஆண்டு பிஎஸ்சி கணிதம் பயின்று வருகிறார். தனது வகுப்பில் படிக்கும் ஒரு மாணவியை அவர் காதலித்து வந்ததாக தெரிகிறது.

இவர்களின் காதல் விவகாரம் அக்கல்லூரியில் கணிதத் துறை தலைவர் பேராசிரியர் சிவசங்கருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அடுத்து சிவசங்கரன் அந்த மாணவர்களை கண்டித்ததுடன், அவளின் காதல் விவகாரம் குறித்து அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனால் மாணவிக்கு அவரது வீட்டில் பிரச்சனையை ஏற்பட்டுள்ளது. இதையறிந்த ஆத்திரமடைந்த மாணவன் சிவசங்கரன் புதன்கிழமை காலை கணிதத்துறையில் இருந்த பேராசிரியர் சிவசங்கரை துறைக்குள் நுழைந்து கடுமையாக தாக்கினார்.

அவருடன் அதே கல்லூரியில் படிக்கும் சுரேஷ், சிவ சுந்தர்ராமன் உள்ளிட்ட மாணவர்களும் சேர்ந்து பேராசிரியரை தாக்கினர். துறை பேராசிரியர் என்றால் எனது காதல் விவகாரத்தில் தலையிடுவியா? எங்கள் காதல் விவகாரத்தை பற்றி வீட்டிற்கு எப்படி சொல்லலாம் என கூறிக்கொண்டே ஆசிரியரை அடித்து உதைத்தனர்.

அடி தாங்க முடியாமல் ஆசிரியர் மயங்கி விழுந்தார், இதனையடுத்து அங்கிருந்த பேராசிரியர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து தகவலறிந்த கோவில்பட்டி போலீசார் கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்தினார்.

இதற்கிடையில் பேராசிரியரை தாக்கிய கல்லூரி மாணவர்கள் 4 பேரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தது. இது குறித்து வேதனை தெரிவித்துள்ள பேராசிரியர் சிவசங்கரன் மாணவர்களின் காதலை கண்டித்தேன் அதற்கு கிடைத்த பரிசு அடி உதை என் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.