கர்ப்பிணிப் பெண் எடுத்த விபரீத முடிவு : அதிர்ச்சிக் காரணம்!!

1163

மயிலாடுதுறையில்..

வருவாய் கோட்டாட்சியர் தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை
மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி பகுதியை சேர்ந்தவர் புஷ்பா தேவி (28). இவருக்கும் பூம்புகார் சாயானவனம் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (31) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

பெண்ணின் வீட்டார் திருமணத்திற்கு 12 பவுன் நகை போடுவதாக கூறியுள்ளனர். ஆனால் அந்த நேரத்தில் நகை போட முடியாததால் ஒன்பது பவுன் நகை, பைக் மற்றும் சீர்வரிசை பொருட்களுடன் புஷ்பா தேவிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

ஆனால் திருமணம் முடிந்த பிறகு கணவன் வீட்டில் புஷ்பா தேவியிடம் நீதி நகையை கேட்டு அவரது மாமியார் அகிலா, நாத்தனார் கவிதா மற்றும் மாமனார் கலியபெருமாள் ஆகியோர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. தற்போது புஷ்பா தேவி கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு அவரது தந்தை உத்திராபதி மற்றும் உறவினர்கள் சென்று பார்த்த போது புஷ்பா தேவி கழுத்தில் காயங்கள் இருந்துள்ளது. தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் இந்த மரணம் அரங்கேறி உள்ளது எனவும் பெண்ணின் வீட்டார் பூம்புகார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து புஷ்பா தேவியின் உடலை பூம்புகார் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் நடந்து முடிந்து எட்டு மாத காலமே ஆகதால் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா இந்த சம்பவம் குறித்து தனி விசாரணை மேற்கொண்டு உள்ளார்.

திருமணம் நடைபெற்று முடிந்த 8 மாதத்தில், 7 மாத கர்ப்பிணி பெண் வரதட்சணை கொடுமையால் அநியாயமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.