இளம் பெண்ணை பூங்காவில் வைத்து சரமாரியாக குத்திய ஒரு தலை காதலன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

988

தெலுங்கானா…

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் மையப் பகுதியை சேர்ந்தவர் ரோகித், இவர் அதே பகுதியைச் சேர்ந்த நவ்யா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். கடந்த 7 மாதங்களாக அந்த பெண்ணை தொடர்ந்து பாலோப் செய்து காதலிப்பதாக கூறி வந்தார்.

ஒரு கட்டத்தில் காதல் என்ற பெயரில் அந்தப் பெண்ணை டார்ச்சர் செய்வது, எங்கு சென்றாலும் அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து செல்வது, தனது காதலை ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்துவது. பொது இடங்களில் வைத்து சில முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபடுவது என அந்த தொல்லை கொடுத்து வந்தார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை முகரம் பண்டிகை என்பதால் சிறிது நேரம் பேச வேண்டுமென நவ்யாவை ரோகித், ராம் நகர் பூங்காவிற்கு அழைத்துச் சென்றார். தன்னிடம் சிறிதுநேரம் மனம் திறந்து பேசும்படி அந்தப் பூங்காவின் புதர் நிறைந்த பகுதிக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்றார், பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நவ்யாவின் வயிறு, கால், கை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினார்.

அந்தப் பெண் வலியால் அலறி துடித்தார், ஆனால் ரோஹித் அந்தப் பெண்ணை ரத்த வெள்ளத்திலேயே விட்டுவிட்டு தப்பினார். பின்னர் அவருடன் வந்திருந்த அவரின் தோழி ஸ்ரேஷ்தா அந்த பெண்ணை பொதுமக்களின் உதவியுடன் சாய்ரக்ஷா மருத்துவமனையில் அனுமதித்தார்.

மருத்துவர்கள் அந்த பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறினார், பின்னர் அங்கு வந்த போலீசார் அந்த பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றனர் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட ரோஹித்தை தேடி வருகின்றனர்.

அவர் அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது, குத்து பட்ட நவ்யா பனகல் பகுதியை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.