தூங்கும்போது ஏசி வெடித்து தாயும் மகளும் பலி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

1105

மும்பை….

தூங்கும்போது ஏசி வெடித்து தாயும் மகளும் பலியான நிலையில், தந்தையும் மகனும் பலத்த காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை லோயர் பரேலில் உள்ள வீட்டில் ஏசி வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். இரண்டு பேர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்த இருவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

லோயர் பரேலில் உள்ள மரியன் மேன்ஷன் இல்லத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. ஏசி வெடித்ததால் லேசான தீயும் ஏற்பட்டது. உயிரிழந்தவர் லட்சுமி ரத்தோரின் மகள் மது என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

லட்சுமியின் கணவர் தேஜாபாய், மகன் தினேஷ் ஆகியோர் ஆபத்தான நிலையில் உள்ளனர். அவர்கள் கஸ்தூர்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த கோடை காலத்தின் போது சமீபத்தில்தான் வீட்டிற்கு புதிய ஏசியை வாங்கியுள்ளனர்.

இதுகுறித்து தேஜாபாயின் மருமகன் சுரேஷ் கூறியதாவது, புதிய ஏசி வாங்கி வந்ததாகவும், வயரிங் பிரச்னை இருப்பதாகவும் தினேஷ் கூறியதாக தெரிவித்தார்.

தீயின் புகையை சுவாசித்த லட்சுமிபென் மயக்கமடைந்தார். சிகிச்சைக்கிடையே அவர் மருத்துவமனையில் மாரடைப்பால் இறந்தாள்.

மது 80 சதவீதம் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தார். தினேஷுக்கு 25 முதல் 30 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.