இதற்காகத்தான் அவளை கொலை செய்து சடலத்தை அலமாரிக்குள் அடைத்தேன் : காதலன் வாக்குமூலம்!!

1231

டெல்லியில் காதலியை கொலை செய்து அலமாரிக்குள் அடைத்து வைத்த காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

டெல்லி கோகல்பூரி பகுதியில் வசித்து வந்த ராம்(35) என்ற நபர் தனது வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக பொலிசில் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரை அடுத்து வீட்டிற்கு வந்து சோதனையிட்ட பொலிசார், அவரின் வீட்டில் இருந்த அலமாரியில் இருந்து 25 மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து புகார் தெரிவித்த அந்நபர் மீது பொலிசில் சந்தேகப்பார்வை திரும்பியுள்ளது. அந்நபரை கைது செய்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், நானும் அவளும் மேற்கத்திய கலாசார பாணியில் லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தோம். இதற்கிடையில் எனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வாங்கிகொண்டு தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தினாள்.

இதற்காக, நான் மறுத்துவிட்டேன். இருப்பினும் என்னை தொடர்ந்து வற்புறுத்தினாள். இவள் இருந்தால் எனது திருமண வாழ்க்கைக்கு ஆபத்து எனக்கருதி அவளை கொலை செய்து சடலத்தை எங்கு போடுவது என தெரியாமல் எனது வீட்டில் இருந்த அலமாரிக்குள் வைத்துவிட்டேன்.

பிறகு எதுவும் நடக்காதது போல இருந்தேன். இருப்பினும் துர்நாற்றம் அடித்து நாம் மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சத்தில் பொலிசில் புகார் அளித்தேன் என கூறியுள்ளார்.