ஏவுகணை தாக்குதலில் 29 பள்ளிக் குழந்தைகள் பலி : கதறி அழுத தந்தை : பதறவைக்கும் சம்பவம்!!

558

ஏமனில் கிளர்ச்சியாளர்களின் பகுதிகளில் அரசுக்கூட்டுப்படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 29 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஏமனில் அதிபர் ஆதரவுப் படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

இதில் ஏமன் தலைநகரைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும், அதிபருக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படைகள் வான்வழித்தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதியானா சாடா மாகாணத்தின் மார்க்கெட் பகுதியில் அரசுப்படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

இதில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்சென்ற வாகனம் பலத்த சேதமடைந்தது. பேருந்தில் இருந்த குழந்தைகளில் 29 பேர் உயிரிழந்ததாக ஏமனில் உள்ள செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் 51 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாகனத்தில் கிடந்த குழந்தையின் சடலத்தைக் கண்ட தந்தை ஒருவர் கதறி அழுத காட்சி காண்போரின் கண்களை குளமாக்கியது.