காவலரின் அந்தரங்கம்… படுக்கையில் அம்பலம்… திருநங்கை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!!

1426

திருச்சி….

திருச்சி மாவட்டம் மருங்காபுரி பகுதியைச் சேர்ந்தவர் பவிதா ரோஸ். திருநங்கையான இவர் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோவிலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யும் பணியை செய்து வந்தார். அப்போது, கடலூர் மாவட்டம் குமராட்சியைச் சேர்ந்த கார்த்திக் என்ற காவலருக்கு உணவு பரிமாற்றிய போது பவிதாவின் செல்போன் என்னை பெற்றுக்கொண்ட காவலர் கார்த்திக் திருவிழா முடிந்த பின்பு அடிக்கடி பவிதாவுடன் வாட்சப்பில் உரையாடி வந்துள்ளார்.

இந்நிலையில், இருவருக்கும் காதல் மலர்ந்த நிலையில் பவிதாவை திருமணம் செய்து கொள்வதாக காவலர் கார்த்திக் கூறியுள்ளார். ஏற்கனவே தான் இருமுறை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றம் அடைந்ததால் அதற்கு பவிதா மறுப்பு தெரிவித்ததாகவும் இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி பவிதா தனது வீட்டில் வைத்து நூறு பேருடன் உறவினர்களின் முன்னிலையில் காவலர் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார். அன்று முதல் கார்த்திக் பவிதா இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தனர். அந்த காலகட்டத்தில் பவிதா உதவியோடு கார்த்திக் தந்தை பெயரில் நிலம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

அப்போது, அங்கு விசாரிக்கும் போதுதான் காவலர் கார்த்திகிற்கு ஏற்கனவே திருமணம் ஆனது தெரிய வந்தது. அதன் பின்பு சில நாட்கள் கார்த்திக் பவிதாவுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 10 ஆம் தேதி இரவு வீட்டிற்கு வந்த கார்த்திக் 11-ம் தேதி அதிகாலை 4-00மணிக்கு பவிதாவை வீட்டில் இருந்த கட்டிலில் கட்டிப்போட்டு விட்டு வாயில் துணியை அடைத்துவிட்டு சென்றுள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள திருநங்கை பவிதா கூறுகையில், காவலர் கார்த்திக் ஒரு ‘கே’ என்பதை நான் நெருக்கமாக இருந்தபோது கண்டுபிடித்துவிட்டேன்..

ஆகையால் என்னை அவர் அடித்து கட்டிபோட்டுவிட்டு என்னிடம் இருந்த நகைகளை எடுத்து சென்றுவிட்டார். என் மீது ஆசைப்படும் ஆண்கள் தேடி வருகிறார்கள்.. கல்யாணம் செய்துவிட்டு படுக்கையில் இருந்துவிட்டு பின்னர் என்னிடம் உள்ள சொத்துக்களுக்கு குறி வைக்கின்றனர். நான் யாருக்கும் எந்த தீங்கும் நினைக்கமாட்டேன்… பிறரது குடும்பம் என்னால் சீரழிய நான் விரும்பமாட்டேன்.. ஆனால், என்னை தேடி வருபவர்கள் என்னை பயன்படுத்தி கொள்வதாக பவிதா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

மேலும், பவிதா வீட்டில் வைத்திருந்த 110 சவரன் தங்க நகை 4 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை காவலர் கார்த்திக் எடுத்துச் சென்றதாக கூறிய பவிதா தான் வைத்திருந்த செல்போன், ஏடிஎம் மற்றும் கைப்பையையும் எடுத்துச் சென்றதாக கூறினார்.

மேலும், உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பவிதா அந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவரிடம் புகார் மனுவை பெற்றுக் கொண்டதற்கான மனு ஏற்பு ரசீது காவல்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காவலர் கார்த்திக் பாவிதாவின் செல்போனில் இருந்த புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளதாகவும் அதில் தென்னிந்திய திருநங்கைகள் நல சங்கத்தின் செயலாளர் அருணா அவமானம் செய்து வருவதாகவும் கூறினார்.

மேலும், இது தொடர்பான புகார் மனுவை உளுந்தூர்பேட்டையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை பத்தாம் அணியின் கமாண்டரிடம் பவிதா கொடுள்ளார். அதைப் பெற்றுக் கொண்ட காவல் துறை அதிகாரி விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.