ஒரே நேரத்தில் 2 பெண் போலீசை வளைத்துப்போட்டு உல்லாசம் : மார்ப்பில் கத்தியால் குத்தி கொலை செய்த கொடூரம்!!

1448

கர்நாடக…..

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் ஹிலியூர்  காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றியவர் சுதா (37) இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கணவர் இறந்துவிட்டார். இதேபோல் அதே காவல் நிலையத்தில் மற்றொரு ஏட்டாக பணிபுரிபவர் ராணி (30) இவருக்கும்   திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

இவர்கள் இருவரும் பெங்களூரில், ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு ஒருவருடன் கள்ளத் தொடர்பில் ஈடுபட்டு வந்தனர்.  அதில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

காவல் நிலையத்திலேயே இருவரும் சண்டையிட்டுக் கொள்ளும் சம்பவங்களும் நடந்து வந்த்து.  இந்நிலையில் சுதாவை தீர்த்து கட்ட ராணி முடிவு செய்தார். இதனால் சுதாவின் உறவினரான மஞ்சுநாத் என்பவரிடம் கொலை செய்ய ராணி பேரம் பேசினார்,  சுமார் ஐந்து லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்பட்டது, சிதாவை கொலை செய்ய மஞ்சுநாத் நேரம் பார்த்துக் காத்திருந்தார். ஆனால் பலமுறை முயற்சித்தும் முடியவில்லை. இந்நிலையில் சுதாவை கொன்றே ஆக வேண்டும் இல்லையென்றால் நடப்பது வேறு என மஞ்சுநாத்தை ராணி மிரட்டினார்.

இதனால் எப்படியாவது சுதாவை கொள்ள வேண்டும் என மஞ்சுநாத் தீவிரமாக இறங்கினார். தனது நண்பன் விஜயையும் தன்னுடன் சேர்ந்துக் கொண்டு சுதாவை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார்.

கடந்த செப்டம்பர் 13-ம் தேதி மாலை சுதா பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார், அப்போது பின்னால் சென்ற நிக்கில் காரில் வீட்டில் டிராப் செய்வதாக குறி சுதாவை காரில் ஏற்றினார், அப்போது வழியில் அந்த காரில் மஞ்சுநாத்தும் ஏறினார்.

மஞ்சுநாத்தைப்பார்த்ததும் சுதாவுக்கு சந்தேகம் வந்தது.  அப்போது மஞ்சுநாத் கையில் வைத்திருந்த பெப்பர் ஸ்பிரேவை சுதாவின் கண்களில் அடித்தார். அதில் சுதா நிலைகுலைந்து போனார்.

உடனே மறைத்து வைத்திருந்த கத்தியால் சுதாவின் மார்பில் சரமாரியாக குத்தி கிழித்தார், அதில் சுதா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பின்னர் அரிசிகரே ரயில் நிலையம் அருகே இருந்த புதரில் சுதாவின் சடலத்தை வீசிவிட்டு சென்றனர். சுதாவை கொன்று விட்டதால் போலீஸ் தன்னை கைது செய்து விடும் என்ற அச்சத்தில் இருந்த மஞ்சுநாதன் தானும் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஏட்டு ராணி, நிகிலை போலீசார் கைது செய்துள்ளனர்.