இரவு பெய்த கன மழை… வயலில் தண்ணீர் தேங்கியிருக்கும் என அஞ்சி சென்ற தந்தை, மகன் : சில மணி நேரத்தில் நேர்ந்த சோகம்!!

1498

திருவாரூர்….

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு கன மழை பெய்தது. குறிப்பாக மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ம் 10 செ.மீ அளவுக்கு பெய்துள்ளது.

இந்நிலையில் மன்னார்குடியை அடுத்த முக்குளம் சாத்தனூர் தளிக்கோட்டை காலனி தெருவைச் சேர்ந்த விவசாயி அன்பரசன். இவர் தனது வீட்டின் அருகே உள்ள வயலில் நேரடி நெல் விதைப்பு பணியினை மேற்கொண்டிருந்தார்.

மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உடல் கருகி பலி.. சோகத்தில் மூழ்கிய கிராமம்!
இந்தச்சூழலில் நேற்று இரவு பெய்த கன மழையின் காரணமாக, வயலில் தண்ணீர் தேங்கியிருக்கும் என அஞ்சிய அன்பரசன், தனது மகன் அருள்முருகனை (27) அழைத்துக்கொண்டு வயலுக்கு சென்றார்.

அப்போது தண்ணீர் தேங்கியிருந்த அடுத்து, நீரைவெளியேற்றுவதற்கான பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்நேரம் திடீரென இடியுடன் மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே தந்தையும், மகனும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உடல் கருகி பலி.. சோகத்தில் மூழ்கிய கிராமம்!
இதனை அறிந்த உறவினர்கள் அவர்களது உடலைப் பார்த்து கதறியழுதனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த போலிஸார் இரண்டு பேரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.மின்னல் தாக்கி, தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.