காதல் கணவரிடமிருந்து மகளை பிரித்த பெற்றோர் : அவர் எடுத்த விபரீத முடிவு!!

481

இந்தியாவில் கல்லூரி மாணவி ஒருவர் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் கீதிகா (19), இரண்டாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் உள்ள தனது அறையில் கீதிகா தூக்கில் தொங்கியுள்ளார்.

அறை கதவை வெகுநேரமாக கீதிகா திறக்காத நிலையில் அவர் அம்மா உள்ளே சென்று பார்த்துள்ளார். மகள் தூக்கில் தொங்கியதை பார்த்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை பொலிசார் உறுதி செய்தனர்.

தனிப்பட்ட காரணங்களுக்காக கீதிகா இறந்ததாக தகவல் வெளியான நிலையில் இது குறித்து அவர் அம்மா ஊடகத்திடம் பேசவில்லை. ஆனால் கீதிகா குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, கீதிகா ஒரு ஆண்டுக்கு முன்னால் சுதிர் ரெட்டி என்பவரை காதலித்துள்ளார்.இதையடுத்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டு கணவருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கீதிகாவின் பெற்றோர் அவரை வலுக்கட்டாயமாக கணவரிடம் இருந்து பிரித்து தங்களது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். இந்த சூழலில் தான் கீதிகா தூக்கில் தொங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.