கள்ளக்காதலை கண்டித்தும் கேட்காத கணவன் : ஆத்திரமடைந்த மனைவியின் வெறிச்செயல்!!

1535

ராணிப்பேட்டை….

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த உரியூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சீராளன். இவர் அதே பகுதியில் சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி ஷோபனா.

இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சீராளனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் போதையில் மனைவியை அடித்து துன்புறுத்துவதாக கூறப்படுகிறது.

இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் மது போதையில் கணவன் சீராளன், மனைவி ஷோபனாவிடம் தகராறு செய்ததால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த மூன்றடி உயர கடப்பாரையால் கணவனின் தலை மீது தாக்கியுள்ளார். மேலும் அங்கிருந்த கட்டுக்கல்லை தலை மீது போட்டுள்ளார்.

இதில் தலை நசுங்கி இரத்த வெள்ளத்தில் சீராளன் இறந்தார். இதையடுத்து ஷோபனா தனது மகன், மகள் ஆகியோரை திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே உள்ள தனது தாய் வீட்டிற்கு அழைத்து சென்று அவர்களை தங்கையிடம் ஒப்படைத்துவிட்டு மப்பேடு போலீசில் இன்று காலை சரணடைந்தார்.

இதற்கிடையே சீராளன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து தக்கோலம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மப்பேடு போலீசார் கொலை வழக்கில் ஷோபனா என்பவர் சரண் அடைந்திருப்பதாக தக்கோலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தக்கோலம் போலீசார் ஷோபனாவை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். போலீசார் விசாரணையில் ஷோபனா தனது கணவர் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்து பலமுறை எச்சரித்தும் அதை பொருட்படுத்தாமல் மேலும் குடித்துவிட்டு பலமுறை குழந்தைகளையும், தன்னையும் அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த தக்கோலம் போலீசார் சோபனாவை அரக்கோணம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கணவனை மனைவியே கடப்பாரை மற்றும் கட்டுக்கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் தக்கோலம் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.