பர்தா அணிய மறுத்த இந்துப்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

1293

மும்பையில்….

பர்தா அணிய மறுத்ததால் ஏற்பட்ட பிரச்சனையில் பிரிந்து வாழ்ந்த மனைவியை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார் கணவர். இந்து பெண்ணுக்கு நேர்ந்த அந்த கொடூரம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மும்பையில் இக்பால் ஷேக் என்பவர் டாக்ஸி டிரைவராக வேலை செய்து வருகிறார். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த 36 வயதான இந்த வாலிபர் ரூபாலி என்கிற 20 வயது இந்து மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில் இவர்களின் திருமணம் நடந்துள்ளது.

திருமணத்திற்கு பின்னர் ரூபாலியின் பெயரை சாரா என்று மாற்றி உள்ளார்கள் இக்பால் குடும்பத்தினர். இக்பால் ஷேக் – ரூபாலிக்கு கடந்து 2020 ஆம் ஆண்டில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை பிறந்ததில் இருந்து குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளன.

இக்பாலின் குடும்பத்தினர் ரூபாலிக்கு சாரா என்று பெயர் மாற்றிய அடுத்த கட்டமாக பர்தா அணியச் சொல்லி ரூபாலியை கட்டாயப்படுத்தி வந்துள்ளார்கள். இதற்கு ரூபாலி மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் குழந்தையை அழைத்துக்கொண்டு சென்று தனியே வாழ்ந்து வந்துள்ளார் ரூபாலி.

இந்த நிலையில் விவகாரத்தை செய்வது என்ற முடிவு வந்திருக்கிறது. நேற்று விவகாரத்து பற்றியும், குழந்தை யாரிடம் வளர வேண்டும் என்பது குறித்தும் முடிவு எடுக்க வேண்டும் என்று ரூபாலியை சந்தித்திருக்கிறார். இரவு 10 மணி அளவில் இருவரும் சந்தித்து இது குறித்து பேசி இருக்கிறார்கள். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த வாக்குவாதம் முற்றியதும் ரூபாலியை ஒரு சந்துக்குள் இழுத்துச்சென்று அங்கு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியிருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்திருக்கிறார் ரூபாலி.

சம்பவம் குறித்து அறிந்த போலீசார் இக்பால் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.