சிறுவனால் கர்ப்பமான இளம்பெண் : 19 வயது பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

1442

நாகப்பட்டினம்….

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த ஆலமழை கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண் அதை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் நட்பாக பழகி வந்துள்ளார். மேலும் சிறுவனிடம் அந்த பெண் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் கர்ப்பமடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இது குறித்து சிறுவனின் தந்தை நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் மீது புகார் அளித்தார்.

புகாரை விசாரித்த நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரை சிறுவனிடம் அந்த பெண் பாலியல் உறவு வைத்துக்கொண்டார். இதனால் அந்த பெண் கர்ப்பமடைந்து இருப்பதையும் கண்டறிந்தனர்.

பின்னர் சிறுவனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த 19 வயது பெண்ணை போக்சோ சட்டத்தில் நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 19 வயது பெண் தற்போது நாகை அரசு தலைமை மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுவனுக்கு பெண் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவர், சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்முறையை தடுக்கும் மற்றும் பாதுகாக்கும் விதமாக 2012 நவம்பர் 14 அன்று இந்தியாவில் போக்சோ சட்டம் நடைமுறைக்கு வந்தது.

மேலும், இந்த பிரத்யேக சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.