நடிகை ரம்பாவுக்கு நடைபெற்ற வளைகாப்பு விழா தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.கனடாவில் வசித்துவரும் ரம்பா மூன்றாவது குழந்தைக்குத் தாயாக உள்ளார்.அதனால், உறவினர்கள் புடைசூழ, இந்திரன் பத்மநாதன் தன் மனைவிக்குக் கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.
எனது கடந்த காலத்தைத் திருப்தியுடன் நான் மீண்டும் பார்க்கிறேன், அதேவேளையில் என் எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்குகிறேன்’ எனக் குறிப்பிட்டு புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இதில் கலந்துகொண்ட நடன ஆசிரியர் கலாவுடன் இணைந்து நடிகை ரம்பா நடனமாடியுள்ளார்.திருமணமான சில ஆண்டுகளில் கணவன் மனைவிக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து கோரினர். அதன்பின்னர் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நடந்த சமரச பேச்சுவார்த்தையில் இருவரும் மீண்டும் ஒன்றிணைந்தமை குறிப்பிடத்தக்கது.