வயிறு கிழிக்கப்பட்டுக் கிடந்த ஏழு மாத கர்ப்பிணிப் பெண்ணின் உடல் : பதறவைக்கும் ஒரு திகில் சம்பவம்!!

1347

பிரேசில்லில்..

பிரேசில் நாட்டில் அரை நிர்வாணமாக கிடந்த ஒரு கர்ப்பிணிப்பெண்ணின் வயிறு கிழிக்கப்பட்டு, அவரது வயிற்றிலிருந்த குழந்தை திருடப்பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அது ஏதோ ஒரு கூட்டத்தார் நரபலியிடும் நோக்கில் செய்யப்பட்ட செயல் என கருதப்படுகிறது.

பிரேசில் நாட்டிலுள்ள Sao Paulo என்ற மாகாணத்தில், Ohana Karolin (24) என்ற இளம்பெண்ணின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

வயிற்றுக்குக் கீழே உடையில்லாமல், அவரது பிறப்புறுப்பு மோசமாக சிதைக்கப்பட்டு, அவரது வயிறு கிழிக்கப்பட்டு, அவரது வயிற்றிலிருந்த ஏழு மாதக் குழந்தை அகற்றப்பட்டிருந்த நிலையில் சடலமாக Karolin கண்டெடுக்கப்பட்ட விடயம், அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடையே கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

குழந்தையின் நிலை என்ன என்று தெரியவில்லை.Karolin சமீபத்தில்தான் தனது கணவரைப் பிரிந்து புதிய காதலர் ஒருவரைத் தேடிக்கொண்டிருந்த நிலையில், இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

பயங்கரமான ஒரு கூட்டத்துடன் Karolin சுற்றிக்கொண்டிருந்ததாக தெரிவித்துள்ள அவரது தோழி ஒருவர், அதனாலேயே அவரது நண்பர்கள் பலர் அவரைவிட்டு தூர விலகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

பொலிசார் இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.