திருமணத்தை தாண்டிய உறவு.. 15 நாட்களுக்கு பின் காணாம போன நபர் பற்றி கிடைத்த அதிர்ச்சி தகவல்!!

1320

தேனியில்..

தேனி மாவட்டம், கம்பம் பகுதியை அடுத்த கூலத்தேவர் முக்குத் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 34). இவரது மனைவி பெயர் கனிமொழி. அப்பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பிரகாஷ் பணியாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த 15 நாட்களுக்கு முன்பாக, தனது கணவர் பிரகாஷை காணவில்லை என புகார் ஒன்றை போலீஸ் நிலையத்தில் கனிமொழி கொடுத்துள்ளார்.

இதன் பெயரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன பிரகாஷையும் தேடி வந்துள்ளனர். மேலும், பிரகாஷின் செல்போன் எண்ணைக் கொண்டும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்போது அதே தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வினோத் குமார் மற்றும் அவரது நித்யா ஆகியோருடன் அடிக்கடி செல்போனில் பிரகாஷ் பேசி வந்ததும் தெரிய வந்துள்ளது.

இதன் பின்னர், வினோத் மற்றும் அவரது மனைவி நித்யா ஆகியோரை அழைத்து வந்து அவர்களிடம் தீவிர விசாரணையை போலீசார் மேற்கொண்டுள்ளனர். இதில், பிரகாஷ் மற்றும் நித்யா ஆகியோருக்கு திருமணத்தை மீறிய உறவு பற்றி தெரிய வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பிரகாஷ் மூலம் கடனுக்கு நித்யா பணம் வாங்கி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் காரணமாக, அவர்களுக்கு இடையே பழக்கம் உருவானதாகவும் கூறப்படுகிறது.

அதே போல், நித்யாவின் கணவர் வினோத்திடமும் நட்புடன் பிரகாஷ் பழகி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே, மனைவியின் போக்கு குறித்து வினோத்திற்கு தெரிய வந்துள்ளது. இதனால், அவரிடம் கோபப்பட்ட வினோத் குமார், பிரகாஷை கொலை செய்யவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் பெயரில், பிரகாஷ் காணாமல் போன அன்றிரவு வினோத்துடன் மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர், வழக்கம் போல நித்யாவையும் பிரகாஷ் காண சென்ற நிலையில்,

பின்னால் வந்த வினோத் குமார், துணியைக் கொண்டு பிரகாஷை கொலை செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் பின்னர் தனது நண்பரான ரமேஷ் என்பவரை வினோத் வரவழைத்துள்ளார். தொடர்ந்து வினோத், நித்யா மற்றும் ரமேஷ் ஆகிய மூவரும் பிரகாஷ் உடலை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு உத்தமபாளையம் முல்லை பெரியாற்றில் வீசியதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, வினோத் உள்ளிட்ட மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதன் பின்னர், பிரகாஷின் உடலையும் முல்லை பெரியாற்றில் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் இத்தனை நாட்களாக தேடி வந்துள்ளனர். பிரகாஷ் காணாமல் போய், சுமார் 15 தினங்கள் கழித்து தற்போது அவரது உடல் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. திருமணத்தை மீறிய உறவின் காரணமாக, கொலை செயப்பட்ட வாலிபரின் உடல் இத்தனை நாட்கள் கழித்து கிடைத்துள்ள சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.