தாயை தோளில் சுமந்து சென்ற மகன்கள் : வாழ்நாள் ஆசையை நிறைவேற்ற செய்த நெகிழ்ச்சி!!

1225

கேரள…..

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த 87 வயதாகும் எலிக்குட்டி பால் ( Elikutty Paul) எனும் மூதாட்டிக்கு நீலக்குறிஞ்சி மலர் பூப்பதை பார்க்க வேண்டும் என்பது வாழ்நாள் ஆசையாக இருந்துள்ளது.

இதனை அறிந்த அவரது மகன்களான ரோஜன் மற்றும் சுந்தரம் ஒரு திட்டம் போட்டுள்ளார். அதன் படி, தனது தாயாரின் நீண்ட நாள் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்தனர்.

அதன்படி தங்களது வீட்டிலிருந்து இடுக்கி மாவட்ட கள்ளிப்பாறைக்கு ஜீப் மூலம் சென்ற அவர்கள், அங்கிருந்து மேலே சுமார் 1.5 கிமீ தூரத்திற்கு தனது தாயாரை தோளில் சுமந்து சென்றுள்ளனர்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் அரிய வகை மலரான நீலக்குறிஞ்சியை கண்டு களித்தார் முதாட்டி. இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.