கர்ப்பமான காதலியை கைவிட்ட காதலன் : பின்னர் நடந்த அதிரடி திருப்பம்!!

742

தமிழ்நாட்டின் வேலூரில் காதலித்து கைவிட்ட பின் குழந்தையைப் பார்த்ததும் மனம் மாறிய இளைஞர் தனது காதலியை மருத்துவமனையிலேயே மணந்து கொண்டார்.

அரி என்ற இளைஞரும், ராஜலட்சுமி என்ற பெண்ணும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்தனர். இதனிடையே ராஜலட்சுமி கர்ப்பமானதாலும், மாற்றுசமுதாயத்தை சேர்ந்தவர் என்று கூறியும் அரியின் திருமணத்திற்கு அவரது உறவினர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. இதனை அறிந்த அரி குழந்தையை காண மருத்துவமனைக்குச் சென்றார்.

குழந்தையை கண்டு மனம் மாறிய அவர் ராஜலட்சுமியை உடனடியாக திருமணம் செய்து கொள்வதாக கூறி மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். தம்பதியை அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சியுடன் வாழ்த்தினார்கள்.