கேரளா மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய புகைப்படம் உள்ளே!!

550

கேரளா மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவிகள் வழங்கி வரும் நிலையில், கிழிந்த உடையை யாரோ அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கேரளாவில் கனமழை பெய்ததால் மாநிலமே வெள்ளக்காடாக மாறியுள்ளது.

இதன் காரணமாக 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பல ஆயிரம் மக்கள் தங்கள் வீடு, உடைமைகள் இழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த உதவிகளை அனுப்பி வருகிறார்கள்.

பல மாநிலங்கள் மற்றும் நகரங்களில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் பெங்களூரில் உள்ள நிவாரண பொருட்கள் சேகரிக்கும் இடத்துக்கு யாரோ கிழிந்த உடையை உதவியாக அனுப்பியுள்ளனர்.

இந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் பரவி வரும் நிலையில், உதவி செய்யாமல் இருந்தால் கூட பரவாயில்லை இது போன்ற இரக்கமற்ற செயலை செய்யவேண்டாம் என பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.