3ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த 5ம் வகுப்பு மாணவன்!!

794

உத்திர பிரதேசத்தில் 9 வயது மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்த 11 வயது மாணவனை பொலிசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் மாநிலம் காஜியாபாத் மாவட்டத்தில் முராத் நகரில் உள்ள அரசு பள்ளியில் சுதந்தர தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சி முடிந்து பள்ளியிலிருந்து வீடு திரும்பும் வழியில் அந்த பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் 9 வயது மாணவியை அதே பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவன் இடை மறித்தான்.

பின் மாணவியை கட்டாயப்படுத்தி, ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்ற அவன், அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்தான்.

’இது குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது’ என மிரட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்தான். வீடு திரும்பிய மாணவிக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து திடீரென மயங்கி விழுந்த சிறுமியை பெற்றோர் வலிக்கான காரணம் குறித்து விசாரித்தனர்.

அப்போது தனக்கு நடந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். மருத்துவ பரிசோதனை செய்ததில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பலாத்காரத்தில் ஈடுபட்ட மாணவனை கைது செய்தனர். அவனை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.