டிப்பர் லாரி மோதி 13 வயது சிறுமி உடல் துண்டாகி உயிரிழப்பு…. மனதை உலுக்கும் சம்பவம்!!

1061

புதுக்கோட்டை…..

புதுக்கோட்டை அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலு என்பவரது மகள் காயத்ரி(13).இவர் இன்று தனது வீட்டிலிருந்து எதிரே உள்ள புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையை கடக்க முயன்ற போது புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி நோக்கி கிரஸர் கல் ஏற்றி சென்ற அசோக் லேலாண்ட் டிப்பர் லாரி காயத்ரியின் மேல் ஏறியது.இந்த சம்பவத்தில் உடல் துண்டாகி காயத்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி மற்றும் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் மரங்களை போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

உடனடியாக அங்கு வந்த வல்லத்திராகோட்டை போலீசார் சிறுமியின் உறவினர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசம் செய்தனர்.பின்னர் சிறுமியின் சடலத்தை உடற்கூறு ஆய்வு பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து டிப்பர் லாரி ஓட்டுனரான நல்லபுடையான்பட்டியை சேர்ந்த தங்கராசு என்பவரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை அருகே டிப்பர் லாரி மோதி 13 வயது சிறுமி உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.