தமிழர்களே உங்களை என்றும் மறக்கமாட்டோம் : வந்து நிற்போம்: கேரள இளைஞன் வெளியிட்ட உருக்கமான வீடியோ!!

705

தமிழர்களின் அன்பை மறக்கமாட்டோம், தமிழத்துக்கு இனி ஒரு பிரச்சனை வந்தால், நாங்கள் துணை நிற்போம் என்று கேரளா இளைஞர் பேசியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கும் கேரள மக்களுக்கு உலகம் முழுவதிலுமிருந்து உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன.

இருப்பினும் தமிழகத்தில் இருந்து அதிக அளவிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதால், கேரள மக்கள் தமிழர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஶ்ரீஜித் என்ற இளைஞர் வெளியிட்டுள்ள வீடியோவில், முதலில் தமிழக மக்கள் என்றாலே முதலில் இங்கு ஒரு மாதிரி பார்ப்பார்கள், அவர்களுக்கு கல்வித் திறன் குறைவு என்று நினைப்பார்கள்.

ஆனால் தற்போது நான் இரண்டு நாட்கள் கேம்பில் இருந்த போது, இரண்டு சக்கர வாகனத்தில் இருந்து, லாரி வரை டன் கணக்கில் எங்களுக்குத் தேவையான பொருள்களை தமிழக மக்கள் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இரண்டு நாட்கள் கேம்பில் இருந்த எனக்கே இப்படி என்றால், பல நாட்கள் அங்கு இருக்கும் மக்கள் இதை புரிந்து கொண்டிருப்பார்கள்.

இதனால் தமிழ்நாட்டில் இனி எந்தப் பிரச்சனை வந்தாலும் நாங்க அங்கு வந்து நிற்போம். உங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.