மகளை காதலனுடன் அனுப்பி வைத்த தாய் : ஆத்திரத்தில் மருமகன் செய்த வேலை!!

854

இங்கிலாந்தில் திருமணமான தனது மகளை, அவளுக்கு பிடித்த காதலனுடன் அனுப்பி வைத்ததால் ஆத்திரமடைந்த மருமகன் மாமியாரை கொலை செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த Muhammad Tafham (31), கடந்த 2013-ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த Aysha Gulraiz (25) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். அதன் பின்னர் பாகிஸ்தானுக்கு சென்ற அவர், 3 வருடங்களாகியும் இங்கிலாந்திற்கு திரும்பவில்லை.

இதனையடுத்து Aysha நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அங்கு வழக்கினை விசாரித்த நீதிபதி, இருவரும் சேர்ந்து வாழுமாறு கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த Aysha, இனிமேல் சேர்ந்து வாழ முடியாது.எனக்கு விவாகரத்து வேண்டும் என கூறியுள்ளார். பின்னர் வழக்கினை ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையில், பிப்ரவரி 4-ம் தேதியன்று Aysha-வின் அம்மா Rahman Begum (46), தன்னுடைய மகளை அவளுக்கு பிடித்த பையனுடன் வாழுமாறு கூறி அனுப்பி வைத்தார்.

அவர் சென்ற அடுத்த இரண்டு நாட்களிலேயே, மர்மமான முறையில் வீட்டில் இருந்த நீச்சல் குளத்தில் Begum கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கழுத்து மற்றும் நெஞ்சு பகுதியில் இருமுறை கத்தியால் குத்தப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த பொலிஸார், சிசிடிவியின் உதவியுடன் குற்றவாளி Muhammad-ஐ கைது செய்தனர். இந்த நிலையில் வழக்கினை விசாரித்த நீதி குற்றவாளிக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.