கேரளாவில் வெள்ள பாதிப்புக்காக நிதி கேட்டு வந்தவர்களிடம் பெண் ஒருவர் தன்னுடைய கம்மழை கழட்டி கொடுத்துள்ள சம்பவம் நெகிழவைத்துள்ளது.
பெரு வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த கேரளா, தற்போது மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இருப்பினும் இந்த வெள்ளம் காரணமாக ஏராளமான மக்கள் என்ன செய்வது என்றே தெரியாமல் உள்ளன.
அந்த அளவிற்கு வெள்ளத்தின் பாதிப்பு உள்ளது.இந்நிலையில் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு குழுவினர் உதவி கேட்டு சென்றுள்ளனர்.
அப்போது அந்த மாவட்டத்தைச் சேர்ந்த இந்திரா என்ற பெண் தன்னுடைய கம்மழை கழட்டி கொடுத்துள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது வெளியாகி, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.