கள்ளக்காதலுக்கு இடையூறு.. குழந்தைக்கு எமனாக மாறிய தாய் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

1247

கிருஷ்ணகிரியில்..

சென்னை குன்றுத்தூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த அபிராமி (25) என்ற பெண் பிரியாணிக் கடையில் வேலை பார்த்து வந்த சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட தகாத உறவால், இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு கணவனையும் கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தை மறக்க முடியாது. கடந்த 2018 இல் நடந்த இந்த கொடூர சம்பவம் தமிழகத்தை பல நாட்களாக உலுக்கிக்கொண்டே இருந்தது.

இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்றும், கள்ளகாதலனுக்காக குழந்தைகளை கொன்றுவிட்டு கடைசியில் ஜெயிலில் கம்பி என்னும் அபிராமியின் சோக கதை ஓர் எடுத்துக்காட்டு என்றும் பேசப்பட்டது. ஆனால், தமிழகத்தில் அதுபோன்ற சம்பவங்கள் நீடித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள போடம்பட்டியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 27). கூலித் தொழிலாளி. இவருக்கும் ஞானமலர் (21) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு பிரபாஷ் (2½) என்ற மகனும், ஆதிரா என்கிற 9 மாத பெண் குழந்தையும் இருந்தனர். மாதேஷ் தினமும் கூலி வேலைக்காக வெளியே சென்று விடுவார். ஞானமலர் தனது குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் ஞானமலருக்கும், அதே ஊரை சேர்ந்த தங்கராஜ் (28) என்ற விவசாயிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலானது. கணவர் வேலைக்கு சென்றதும், தனது கள்ளக்காதலன் தங்கராஜுடன், ஞானமலர் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தார். இதுகுறித்து அறிந்த மாதேஷ், மனைவியை கண்டித்தார். மேலும் இனி கள்ளக்காதலை தொடர கூடாது என்று எச்சரித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஞானமலர், தனது கள்ளக்காதலன் தங்கராஜிடம் நடந்தது குறித்து தெரிவித்தார்.  மேலும் தனது குழந்தைகள் இருப்பதால் தன்னால் கள்ளக்காதலை தொடர முடியாது. எனவே அவர்களை கொலைசெய்து விடலாம் என ஞானமலர் கூறினார். இதையடுத்து தங்கராஜ் கூறியபடி, ஞானமலர் குழந்தைகள் பிரபாஷ், ஆதிரா ஆகிய 2 பேருக்கும் எலிபேஸ்டை கொடுத்தார்.

மேலும் தானும் விஷம் குடித்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 9 மாத பெண் குழந்தை ஆதிரா பரிதாபமாக உயிரிழந்தது. மருத்துவர்கள் ஞானமலரை பரிசோதனை செய்ததில் அவர் எலிபேஸ்ட் சாப்பிடவில்லை ஆனால் நாடகமாடியது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த ராயக்கோட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்ததில் கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த குழந்தைகளை கொலை செய்ய முயன்றது தெரிந்தது. இதனையடுத்து ஞானமலர் மற்றும் கள்ளக்காதலன் தங்கராஜ் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.