தமிழகத்தில் துரோகம் செய்த மனைவியை கணவர் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மும்மலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதி அரிகிருஷ்ணன்-தங்கமாரியம்மாள். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் தங்கமாரியம்மாளுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெருமாளுக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதைத் தொடர்ந்து தங்கமாரியம்மாளும், பெருமாளும் தனிமையில் இருப்பதை கண்ட அரிகிருஷ்ணன் இருவரையும் சரமாரியாக வெட்டிக்கொன்றுவிட்டு காவல்நிலையத்தில் சரண் அடைந்தார்.
அதன் பின் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.