தமிழகத்தில் மனைவியைப் பற்றி தவறாகப் பேசியதால், அர்ச்சகரை அம்மிக்கல்லை போட்டு கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையின் தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. இவர் அதே பகுதியில் கோவில் அர்ச்சகராகவும், ஆட்டோ டிரைவராகவும் இருந்து வந்துள்ளார். இவருக்கு சத்யா என்ற மனைவியும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் கார்த்திக் ராஜா நேற்றிரவு வீட்டிற்கு வெளியே தூங்கியிருந்த நிலையில், இன்று அதிகாலை ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் கார்த்திக் ராஜாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதன் பின் கார்த்திக் ராஜாவின் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் ரத்தம் படிந்த கத்தியுடன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
அப்போது பொலிசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரம்ஜான் பேகம் என்ற பெண்ணை நான் காதலித்து திருமணம் செய்துகொண்டேன்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் கார்திக் ராஜா தன்னை சந்தித்து, தன்னுடைய நண்பரின் தங்கை திருமணத்தை நடத்தி வைக்கும்படி கூறினார்.
அப்போது இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. அந்த நேரத்தில் அவர் என் மனைவியைப் பற்றி தவறாக பேசினார்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த நான், அவர் தூங்கிக் கொண்டிருந்த போது கத்தியால் குத்தினேன், ஆனால் அவரது உயிர் போகவில்லை, அதனாலே அருகில் இருந்த அம்மிக்கல்லை தூக்கி தலையில் போட்டு கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.