மனைவியை கொலை செய்து 3 மாதம் பிரிட்ஜில் வைத்திருந்த கணவனுக்கு கிடைத்த தண்டனை!!

609

சீனாவில் மனைவியை கொலை செய்துவிட்டு அவரை 3 மாதம் பிரிட்ஜில் வைத்திருந்த கணவனுக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சீனாவின் Shanghai மாகாணத்தின் Hongkou மாவட்டத்தைச் சேர்ந்தவர் Zhu Xiaodong(31). இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தன்னுடைய மனைவியான Yang Liping(30)-யுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை கொலை செய்துள்ளார்.

ஆனால் இந்த விடயம் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, அவரின் உடலை சுமார் மூன்று மாதங்கள் பிரிட்ஜில் ஒளித்து வைத்துள்ளார்.

இதையடுத்து அதே ஆண்டு பிப்ரவரி 1-ஆம் திகதி மனைவியின் அப்பா பிறந்தநாளிற்கு மனைவி இல்லாமல் இவர் மட்டும் சென்றுள்ளார். அப்போது இதற்கு மேல் மறைக்க முடியாது என்று கூறி, அன்றையே தினமே காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

அப்போது அவர் மனைவி கொலை செய்த விவகாரம் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக, மனைவியின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் WeChat போன்ற சமூகவலைத்தளைல் சேட்டிங்கிலே பேசியுள்ளார்.

அதுமட்டுமின்றி அவருடைய பணத்தை எடுத்துக் கொண்டு வேறொரு பெண்ணுடனும் ஊர் சுற்றிதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து வழக்கு நடந்து வந்த வேளையில், தற்போது அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த பெண்ணின் பெற்றோர் Zhu Xiaodong-க்கு மரண தண்டனை தான் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தியதாகவும், அதுமட்டுமின்றி அந்நாட்டு மக்களும் மரணதண்டனை கொடுக்க வேண்டும் இணையதளங்களில் கூறியதன் பயனாகவும் இந்த தண்டனை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து நிதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியவுடனே, அந்தநாட்டின் இணையதளங்களில், இது தான் டாப் டிரண்டில் இருந்துள்ளது.