கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாக கிடந்த ஆசிரியை: கணவன் கொன்றாரா?

1056

தமிழகத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் பள்ளி ஆசிரியை ஒருவர் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் சொந்தமாக சலூன் கடை நடத்தி வருபவர் மோகன்ராஜ் (42). இவரது மனைவி சண்முகப்பிரியா (40), தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இன்று காலை குழந்தைகள் இருவரும் பள்ளிக்குச் சென்றுள்ளனர். அதன்பின் துணி காய வைப்பதற்காக வீட்டின் பின்புறத்துக்கு சென்றுள்ள அவர், கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், ஆசிரியையின் கழுத்து கயிறால் இறுக்கப்பட்டு, கத்தியால் அறுக்கப்பட்டதை உறுதி செய்துள்ளனர்.

அதன்பின் பொலிசார் நடத்திய விசாரணையின் போது, யாருக்கு நடந்தது போல் மிக சாதாரணமாக மனைவி இறந்த கவலையோ, பதற்றமோ இல்லாமல் இருந்த கணவன் மோகன் ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆசிரியையின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. இவருக்கு பொறியியல் கல்லூரியில் பயிலும் மகனும், பள்ளியில் பயிலும் மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.