8ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுனர்!!

735

சென்னை முகப்பேரை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் தனியாக இருக்கும்போது அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (33) என்ற ஆட்டோ ஓட்டுனர் மாணவியின் வீட்டுக்கு சென்று அவரை மிரட்டி பலமுறை கற்பழித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை தாயிடம் தெரிவிக்கவில்லை.
சமீபத்தில் மாணவிக்கு வயிற்று வலி ஏற்படவே, அவரின் தாயார் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதனால் பேரதிர்ச்சிக்கு ஆளான அவரது தாயார், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் பொலிசார் அந்த ஓட்டுனரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.