அவன் ஆண்மையில்லாதவன்… : அவனுடன் எப்படி வாழ முடியும் : காதலன் குறித்து நடிகை நிலானி!!

1290

நிலானி

காதலன் காந்தி லலித்குமாரால் நான் அதிகம் துயரங்களை அனுபவித்தேன், ஆண்மையில்லாதவனை நான் எப்படி திருமணம் செய்துகொள்வேன், அதனால் தான் நான் அவரை விட்டு பிரிந்துவிட்டேன் என நடிகை நிலானி கூறியுள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட காந்தியும், நடிகை நிலானியும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் படுக்கை அறையில் ஒன்றாக இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், நடிகை நிலானி தன் மீதான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதை தடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார்.

கணவர் என்னை விட்டு பிரிந்துசென்றுவிட்டதால், எனது பிள்ளைகளை வளர்க்க சிரமப்பட்டேன். சிறு சிறு வேடங்களில் நடிக்கும் பணத்தினை வைத்து எனது குடும்பத்தை பார்த்துக்கொண்டேன். இந்நிலையில் தான், தயாரிப்பாளர் என காந்தி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார். நான் வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததால் அதை நம்பி அவருடன் பழக ஆரம்பித்தேன்.

நான் சினிமா படப்பிடிப்பில் இருக்கும் போது என் குழந்தைகளை காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளியில் இருந்து அழைத்து வருவார். இதனால் எங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தோம். அப்போது நாங்கள் இருவரும் சேர்ந்து குறும்படம் ஒன்று எடுத்தோம். அந்த படத்தில் நான் காந்தியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை என் அனுமதி இல்லாமல் எனது பேஸ்புக் பக்கத்தில் நானே பதிவு செய்ததுபோல, காந்தி ஐ லவ் யூ மாமா என்று பதிவு செய்துள்ளார். இது நான் தான் பதிவு செய்ததாக நினைத்து அனைவரும் என்னிடம் கேட்டனர். இதன் மூலம் எங்களுக்குள் பிரச்சனை ஆரம்பித்தது.

என்னுடன் இருந்த போது காந்தி அவரது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை சொன்னார். ஒரு வழக்கில் ஆந்திரா பொலிசார் தன்னை பிடித்து ஆண் உறுப்பில் மின்சாரம் வைத்ததால்தான், உன்னை திருப்திப்படுத்த முடியவில்லை என்று கூறினார்.

ஆண்மை இல்லாதவரை நான் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும். அவன் நல்லவன் கிடையாது. குடிபழக்கத்துக்கு அடிமையானவர் என்று அவருடைய குடும்பத்தினரும் கூறினர். என் இரண்டு குழந்தைகளுக்காகத்தான் நான் யாரையும் திருமணம் செய்யவில்லை என கூறியுள்ளார்