அம்ருதாவின் சாபம் சும்மா விடாது : கொந்தளித்த பிரபல நடிகை!!

475

அம்ருதாவின் சாபம் சும்மா விடாது

தெலுங்கானாவில் பிரணய் என்ற இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி அம்ருதாவின் சாபம் சும்மா விடாது என நடிகை உமா ரியாஸ்கான் கோபத்துடன் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் பிரணய் என்ற இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாருதி ராவ் உட்பட 8 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நடிகை உமா ரியாஸ்கான் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ’ஜாதி, மதம் எனது கௌரவம் என்று நினைப்பவர்கள் முதலில் திருமணம் செய்துகொள்ள கூடாது, பிள்ளைகள் பெற்றுக் கொள்ளக் கூடாது. பின்னர் அவர்களின் பிள்ளைகளுக்கு ஆசைப்பட்ட அனைத்தையும் செய்துவிடுகிறார்கள்.

ஆனால், அவர்கள் திருமணத்திற்கு கணவனையோ அல்லது மனைவியையோ தேர்ந்தெடுக்கும்போது ஏன் தடுக்கிறீர்கள். சின்ன பிள்ளைகளை இப்படி செய்துவிட்டீர்கள். கண்டிப்பாக இவர்கள் தண்டனைக்குரியவர்கள்.

கௌரவம் முக்கியம் என்று நினைப்பவர்கள், தான் என்ற அகம்பாவம் கொண்டவர்கள் தான் இவ்வாறு செய்கிறார்கள். இனிமேல் பேசி என்ன ஆகப் போகிறது. அந்த பையன் இறந்துட்டான்.

அவனை கொன்றவருக்கு அதிகபட்ச தண்டனை உடனடியாக கிடைக்க வேண்டும். அவள் கண் முன்னே அவனை வெட்டியுள்ளனர். அவளது மொத்த சாபமும் அம்ருதா யாரை கூறுகிறாளோ அவர்களுக்கு போய் சேரும். இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை’ என தெரிவித்துள்ளார்.