பிஞ்சு குழந்தையை கிணற்றில் வீசிய கொடூர தாய் : கணவரிடம் நாடமாடியது அம்பலம்!!

476

இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூரில் பெண் ஒருவர் தமது ஒன்றரை வயது பிஞ்சு குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு கணவரிடம் நாடகமாடியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

திருச்சூரின் செவ்வூர் பகுதியில் கிணற்றில் இருந்து ஒன்றரை வயது பிஞ்சு குழந்தையின் சடலம் மீட்க்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசாரிடம், குழந்தையின் தாயார் ரம்யா(33) வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில், கடந்த ஞாயிறன்று இரவு வாசலில் யாரோ தட்டுவது போன்று இருந்தது என்றும், வாசல் திறந்ததும், தம்மையும் குழந்தையையும் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அருகாமையில் உள்ள கிணற்றில் தள்ளியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் பொலிசாருக்கு இதில் சந்தேகம் எழவே, ரம்யாவை தனியாக விசாரித்துள்ளனர். அப்போது கணவர் மீதிருந்த கோபத்தாலையே தாம் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.

மதுவுக்கு அடிமையான தமது கணவர் எப்போதுமே தாமதமாக வீட்டுக்கு வருவதன்பேரில் இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர்.

சம்பவத்தன்று இரவு வெகுநேரமாகியும் கணவர் பினிஷ் வீட்டுக்கு வராததால் மொபைலில் அழைத்து சண்டையிட்டுள்ளார்.

மேலும் ஆத்திரம் அடங்காத ரம்யா தமது ஒன்றரை வயது மகளையும் வாரியெடுத்துக் கொண்டு கிணற்றில் குதித்துள்ளார்.
ஆனால் அங்கிருந்த தண்ணீர் குழாயில் சிக்கியிருந்த அவர் ஒருகட்டத்தில் மேலேறி வந்துள்ளார்.

இதனிடையே பெற்ற மகளை எண்ணி வருந்திய ரம்யா, உடனடியாக மீண்டும் கிணற்றில் குதித்துள்ளார். ஆனால் குழந்தையை அவரால் அந்த இரவு நேரத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து கணவரை அழைத்து பொய்யான கதை ஒன்றை கூறியுள்ளார்.

தற்போது பிஞ்சு குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துள்ள குற்றத்திற்காக ரம்யா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.