பூட்டிய வீட்டிற்குள்ளேயே வருடக் கணக்கில் தனிமையில் வசிக்கும் நடிகை கனகா… ஏன் தெரியுமா?

1885

நடிகை கனகா

நடிகை கனகா தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் கரகாட்டகாரன் படத்தில் மூலம் பெரும்நல்ல வரவேற்பை பெற்றார் கனகா, இப்போது இருக்கும் இடம் தெரியாமல் தனிமையில் உள்ளார்.


12 வருடங்கள் சினிமாவில் நடித்து வந்த அவர், அதன்பிறகு நடிக்கவில்லை. ‘முத்துகுமார்’ என்ற என்ஜினீயரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. பின்பு முத்துகுமார் யார் என்றே எனக்கு தெரியாது என கனகா கூறினார். இதற்கிடையில், 2013 ஆம் ஆண்டு ஆலப்புழா மருத்துவமனையில் அவர் மரணமடைந்துவிட்டதாக ஒரு தகவல் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் அந்த தகவல் போலியானது என்றும் தனது தந்தை தன்னிடம் உள்ள சொத்துக்களை அபகரிப்பதற்காக இப்படி ஒரு தகவலை பரப்பினார் என குறித்த போலியான செய்திக்கு பின் கனகா விளக்கம் கொடுத்திருந்தார். இவரது அம்மா தேவிகா பிரபல கதாநாயகியாக ஏராளமான படங்களில் நடித்து சம்பாதித்த சொத்துகளுக்கு எல்லாம் ஒரே வாரிசு கனகாதான். தனது தாயார் தேவிகா சம்பாதித்து வாங்கிய ஒரு பழைய பங்களாவில்தான் அவர் வசித்து வருகிறார்.

தன்னிடமுள்ள சொத்துக்களை யாராவது பறித்து விடுவார்களோ என்ற அச்சம் அவரது அடிமனதில் பதிந்து விட்டது. அதனால் அவர் யாருடனும் பேசிப்பழகுவது இல்லை என கூறப்படுகிறது. மேலும், இவரது தந்தையே சொத்துக்காக தன்னை துன்புறுத்துகிறார் என கனகா குற்றச்சாட்டு சுமத்தினார்.

கடந்த சில வருடங்களாக வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தனிமையில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் அவர் வெளியே வருவதில்லை. அண்மையில் நடந்த ஒரு சினிமா சங்க தேர்தலில் அவர் கலந்து கொண்டு வாக்களிக்க வந்தார் என்றும் கூறப்படுகிறது. பூட்டிய வீட்டுக்குள் வருடக்கணக்கில் கனகா வசித்து வருவது அவரைப் பற்றிய மர்மங்களை மேலும் அதிகரிக்கச் செய்கிறது எனப் பலர் கூறி வருகின்றனர்