14 வயது மாணவனுடன் காருக்குள் ஆசிரியை செய்த மோசமான செயல் : பின் நேர்ந்த விபரீதம்!!

1088

அமெரிக்கா…..

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஹியாலேஹ் நடுநிலைப்பள்ளியில் நாடகத்துறை ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர் 31 வயதான பிரிட்டினி லோபஸ் முர்ரே.

அவர் தற்போது மியாமி டாடே சிறையில் பல்வேறு வழக்குகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் மீது மானபங்கப்படுத்துதல், குழந்தையோடு அத்துமீறி உறவுகொள்ளுதல் முதலான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்பள்ளியில் பயிலும் 14 வயது மாணவனுடன் சுமார் 2 மாதங்களாகப் பாலியல் உறவில் ஈடுபட்டு வந்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை பிரிட்டினியின் அந்தரங்கப் புகைப்படங்கள் மாணவனுக்கு அனுப்பப்பட்டிருப்பதைக் கண்டுள்ளார்.

இதுகுறித்து 14 வயது மாணவன், கடந்த ஆகஸ்ட் மாதம், தன்னிடம் தனது ஆசிரியை விருப்பம் தெரிவித்ததாகவும், அதன்பிறகு இருவரும் பல்வேறு இடங்களுக்குப் பயணித்து, பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.