15 வயது சிறுமியை கொன்றுவிட்டு சடலத்துடன் உறவு : இளைஞர்கள் வெறிச்செயல்!!

876

இந்தியாவில் 15 வயது சிறுமியை கொன்றுவிட்டு சடலத்துடன் உறவு கொண்ட இரண்டு இளைஞர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார். சிறுமியின் உறவுக்கார இளைஞர்களான சவுரவ் (19) மற்றும் கமல் (15) ஆகிய இருவரும் அவருடன் நட்புடன் இருந்து வந்தனர்.

இதில் சவுரவ் சிறுமியை காதலித்த நிலையில் அவரிடம் கூறியுள்ளார். ஆனால் தனக்கு படிப்பு முக்கியம் என சிறுமி கூறிவிட்டார்.

ஆனால் சிறுமிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக எண்ணிய சவுரவ் கமலுடன் சேர்ந்து சிறுமியை கடத்தியுள்ளார். பின்னர் அங்குள்ள ஏரியில் வைத்து சிறுமியின் கழுத்தை நெரித்துள்ளனர்.

இதில் சிறுமி இறந்துவிட்ட நிலையில், அவர் சடலத்துடன் சவுரவும், கமலும் உறவு கொண்டனர்.

சம்பவம் நடந்து இரு தினங்கள் கழித்து பொலிசார் சிறுமியின் சடலத்தை கைப்பற்றிய நிலையில் இது குறித்து விசாரித்தார்கள்.

அப்போது சவுரவ் மற்றும் கமல் தான் கொலையாளிகள் என்பதை உறுதி செய்த பொலிசார் கமலை தற்போது கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி சவுரவை தேடி வருகிறார்கள்