15 வயது சிறுவனுடன் உறவு வைத்திருந்த கர்ப்பிணி ஆசிரியை: நிர்வாண புகைப்படத்தால் அதிர்ச்சி!!

955

அமெரிக்காவில் 15 வயது மாணவனுடன் தகாத உறவு வைத்திருந்த ஆசிரியையைக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.டெக்சாஸை சேர்ந்தவர் கேத்தரீன் ஹார்பர் (28). இவருக்கு கடந்த 2016-ல் 15 வயது மாணவனுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் கேத்தரீன் கர்ப்பமாக இருந்துள்ளார். சில காலம் இந்த உறவு தொடர்ந்த நிலையில் வேறு நபர் மூலம் இது வெளியில் தெரிந்துள்ளது.பின்னர் இது பொலிசார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் கடந்தாண்டு கேத்தரீன் கைது செய்யப்பட்டார்.

கேத்தரீன் செல்போனில் அவர் நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்களும் இருந்துள்ளது.அவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதோடு பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் கேத்தரீன் கையெழுத்திடவும், சிறை தண்டனைக்கு பின்னர் அவரின் நன்னடத்தையும் சோதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.